Saturday 3 November 2012
Sunday 11 March 2012
நீயே என் உலகம்
உலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை. உன்னை காணும் முன்பு வரை..
உன்னை கண்ட பிறகோ, உலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்.. * நீயே என் உலகம் ஆகி விட்டதால் சுமன் *
ஒவ்வொரு நொடியும் உன்னகாக
ஒவ்வொரு நொடியும் உன்னகாக சுவாசிக்க ஆசை!! அந்த ஒரு நொடியில் எனக்கு பிடித்தது எதுவென்றால் உன் பெயரை சொல்ல ஆசை !!! உனக்காக கண் விழியில் நீரோடை காண ஆசை!!! நான் உனக்காக எழுதும் கவிதைகளையும் நீ படித்து அதிலிருந்து எனக்காக நீ எழுதும் ஓரிரு வரிகளை காண ஆசை !!! நாம் இருவரும் தனிமையாக கை கோர்த்து நடக்கையில் ஆசை வெள்ளத்தில் நானும் ஆனந்த கலையில் நீயும் இருக்கும் அந்த நிமிடத்தை காண ஆசை !!!சுமன் ...
காதல் கவிதை
நீ நிலவாக இருப்பாயானால், எனக்கு, நீர் தேங்கும் குளமாகவே ஆசை காரணம் எனக்குள் உன்னை காண்பதற்கு! சுமன் ...
ஆசை.......
அன்பே
உன் அன்பில் வாழ ஆசை
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் அழமான அன்பில் வாழ ஆசை.
சுமன்
மண்ணில் பிறப்பதற்கு ஒரு பொருள்
பிறப்பிற்கு ஒரு பொருள் வேண்டும்
அப்பிறப்பு நல் பிறப்பாய் அமையவேண்டும்
சாதாரண பிறப்பில் தான் நாம் அனைவரும்
அன்னையின் சாதனை படைப்பு தான் நாம்
கற்றதோர் கல்வி , சிறந்ததோர் பாடம்
ஆசிரியர் கல்வி , பகுத்தறிவில் சிந்தனை
கற்பனை ஓவியமாக , கவிதையாக
சிற்பியும் வடிப்பான் கற்பனையில் சிலையை
அவன் சென்ற பிறகு கால சுவடுகள் ஆகின்றன ....
ஏழு பிறப்பில் சிறந்ததோர் மனித பிறப்பு
ஆர் அறிவு கொண்டதால்
ஆர் அறிவில் ஓர் அறிவு கற்பனை
கற்பனையில் தான் மனிதன் முழு பிறப்பு
அடைகிறான் . என்பதே என் கருத்து ...........சுமன்
கற்பனை .................
கவிதை என்பது கற்பனை பெண்மை கண்களில் நீர் சுமந்து உயிரோடு உயிராக உறவுக்குத் தடையாக மடித்தெடுத்துக்கொண்டு கவிதைகளும் உறக்கத்தை கலைக்கின்றது உள்ளதை உள்ளதே கலையாத கற்பனை கனவு கன்னி என் கனவில் ............ சுமன் ......
Saturday 18 February 2012
அன்பு
உன் பார்வையில் அன்பு வேண்டும்
உன் பேச்சில் அன்பு வேண்டும்
உன் செயலிலும் அன்பு வேண்டும்
நம் இருவர் வாழ்வில் முதல் உலகமே
அன்பு ...........................
அன்பு
அன்பு என்பது அன்னவரின் பாசவலை அளவுக்கு மீறினால் அதுவே கொடியவலை இருந்தும் இவ்வன்பு எல்லோர்க்கும் இன்பவலை நெஞ்சம் உருக கண்கள் நீசொரிய என்றும் என் இதயத்தில் நிலைபெறிருக்கும் அன்பு செல்வங்கள்
Sunday 22 January 2012
பாசம் !
இது உறவுகளை விட்டு தூரம் அதிகமாகும் இன்றைய நிலை ! நிகழ்வுகளில் மட்டுமே பகிர்ந்துகொள்ள படுகிறது ! கடை கோடிகளில் கண்டுவிட்டால் - இது புன் முறுவலுடன் விடை பெறுகிறது ! அவசர உலகத்தில் உறவுகள் -இன்னும் பாசத்தோடு பகிர்ந்து கொள்ள நேரமில்லை ! காரணம் ஆயிரம் சொல்லி -இங்கே பாசம் கூறு போட படுகிறது ! உலகத்தில் எல்லாம் கிடைத்த பிறகு ஒரு நாள் பாசத்திற்கு ஏங்கலாம்- அன்று பணத்தை கொண்டு பாசத்தை மட்டும் வாங்க முடியாது ! வேதனையை தவிர ........... கவி சுமன்
பாசம் எப்படி வரும்.?...
மடி கறந்த பாலையும் பரி கொடுத்து கண்ணீர் விட்டது பசு மாடு மண்ணை தின்று பசியாறியது கண்ணு குட்டி
அழகு கெடுமென்று தாய் பால் மறுத்து மாட்டு பால் கொடுக்க குழந்தையும் உதைத்து கொண்டே குடித்தது
பாசம் எப்படி வரும்.?....கவி சுமன்
யாருக்கு தெரியும் என் பாசம் !
அகரமாக உன்னை கண்டேன் அன்று முதல் எழுத்து நீ தான் என்று
அறியவைத்தாய் உன்னை - என் அடி மனதில் மென்மை
அன்பு கொண்டாய் நீயே என்று அரவணைத்தேன் உரிமை கொண்டு
பாசம் கொண்டாய் என் மீது இன்றும் பரிவு கொண்டேன் நீ தான் என்று
நல்லவனாக உனக்குள் என்றும் நாளெல்லாம் உன் பாசத்திற்கு ஏங்கும்
யாருக்கு தெரியும் உன் பாசம் ! கவி சுமன்
பாசம்............
உலகிலேயே மோசமான அடிமைத்தனம் பாசம் மட்டுமே நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும் இதனால்கவி சுமன்
விழிகளுக்கு சோகம்
வாடிய இதயம் மீண்டும் துளிர்த்தது உன் வார்த்தைகளை கண்டு.... புன்னகைத்த விழிகள் மீண்டும் நனைந்தது உன் பிரிவுகளை கண்டு.... அதனால் இதயத்துக்கு இன்பம் உன் நினைவுகளால்..... விழிகளுக்கு சோகம் என் பார்வைகளில்.....கவி சுமன்
சோகம்
அமைதியான மனசில் சில குழப்பங்கள்.... பொறுமையான உள்ளத்தில் போர்க்குணங்கள்.... சாந்தமான முகத்தில் சஞ்சலங்கள்...
இந்த ரோதனைகள் எல்லாம் நீ தந்த வேதனைகளின் வடுக்கள்....
வேதனைகளின் இடையேயும் - உன் நினைவுகள் பல நெஞ்சில் நச்சென்று ஓட்டிக்கொள்ளுதே...!!கவி சுமன்
சோகம்........!
வாழ்க்கையில் எத்தனை சோகம் இருந்தாலும் உன்னை பார்த்தால் வரும் சோகமும் பறந்து ஓடி விடும்....! எப்போதும் நீ என்னுடனே இருக்க நான் விழைகிறேன் அன்பே.....!
கவி சுமன்
என் லூசு காதலியே .....!
பேசி வருவதில்லை காதல் ..
எனக்கு நீ ஓவொரு முறையும்
உன் பூ போன்ற கைகளால்
எனக்கு கவிதை அனுப்புகின்றயே..!
அதிலே தெரிகிறது நீ என் மீது
கொண்ட காதால் ..
இது ஊமை காதல்அல்ல
நீ என் மேல் வைத்து இருக்கும்
காதல் உயிரை விட மேலானது
என்பதை நன்அறிவேன்!..
கவி சுமன்
காதலின் லீலைகள்............................
உன்னை உரத்து திட்டிக் கொள்கிறேன் என் இம்சை வார்த்தைகளால் காதல் வார்த்தை பேசிக் கொள்கிறேன் என் மௌனங்களால் பூமி அதிரும்படி முத்தமிட்டுன் இதழில் நாணம் கொண்டு புதைக்கிறேன் உன் மார்பினில் என் முகத்தை மறு ஜனனத்திட்கான நேரமிதுவென உணர்த்தி நீ புரிவாயுன் லீலைகளையென நேரத்தினை உனக்கென அர்ப்பணித்து................!!
அவள் விரும்பாத பொய்
அன்பே உன்னை காதலிக்க ஒரு சில பொய் உரைத்தேன்
உண்மைதான்!! எனக்காக பிறந்தவள் நீயென்றும் உன்போல் அழகு யாரும்
இல்லையென்றும்?நீயோ என் உணர்வை ரசிக்கவில்லை? என்னை விரும்பவுமில்லை
இன்று அதே பொய் வார்த்தைகள் மாற்றம் பெறாமல் எழுத்தின் வடிவில் குமுதம் இதழில் பாராட்டும் காதல் கவிதயாய்!!? கவி சுமன்
பொய் காதல்........
காதலுக்கு கண்கள் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்கள்........ அது பொய்
அப்படி இருந்து இருந்திருந்தால்.. நீ என்னை காதலித்து இருந்திருந்தால்..............கவி சுமன் .............
பொய் காதல் தோற்றதடி!
காகிதங்களில் கடிதம் எழுதி காகிதத்தோடு கண்ணீரும் கலந்து குப்பைதொட்டியில் முடியும் காதல் அன்று "சில"
இன்று தொலைபேசி என் பரிமாற்றத்தோடு நட்பாய் தொடங்கி ஈர்ப்பினால் காதலாய் கடைசியில்
அழுகிய பழமாய் உண்மை தோற்காமல் பொய் காதல் தோற்றதடி மனதோடு கலந்த
காதல் அழிவதில்லையடி அழகோடு கலந்த காதல் அழிவிற்கு மறுபெயரடி உணரட்டும் காதலர்கள்
"காதலின்" தூய்மையை ........
எல்லாம் பொய்
எல்லாம் பொய் இந்த உலகவும் -பொய் அதில் வாழும் உறவுகளும் பொய்....! மனிதனும் பொய் -அவன் மனங்களும் பொய் -அவன் வார்த்தைகளும் பொய்....! சிலைகளும் பொய் -சிற்ப்பங்களும் பொய்.....! மனிதன் சுவாசிப்பதும் -பொய் உயிர்வாழ்வதும் பொய் விலங்குகளும் பொய்-அதன் ஒசைகளும் பொய்.... சங்கீதம் பொய் அதன் ஆலபணைகளும் பொய்.....! எல்லாம் பொய் இங்கு எல்லாம் பொய்...! இப்படி நான் சொல்லும் -நாள் என் காதல் பொய் என்று -நீங்கள் சொல்லும்போது....!
Monday 16 January 2012
தெரியாது இதுதான் அன்பு என்று
தெரியாது இதுதான் அன்பு என்று கண் கலங்கி நிற்கும் போது கை கொடுத்த நட்பை - நான்
நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை.......... துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது தட்டி கொடுத்த உறவுகளை - நான்
நட்பென்று நினைத்ததும் இல்லை..... நடந்து செல்லும் பாதை எங்கிலும் நிழல் போல அருகில் நடந்து வந்து
புன்னகைத்த உள்ளதை - நான் நட்பென்று உணரவில்லை ........ தெரியாது இதுதான் அன்பு என்று உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்
உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல உயிரோட்டமான நட்பும்தான் என்று .........
{கவிஞன் சுமன் }
Saturday 14 January 2012
Subscribe to:
Posts (Atom)