Pages

Friday 16 December 2011

கண் பேசும் கவிதை

கண் பேசும் கவிதை 


மற்றவர்கள் மயங்கினார்கள் 
மயக்கும் என் கவிதைக்கு. 
மயங்கியே தான் போனேனடி 
மங்கை உன் கண்ணுக்கு. 

காதல்


வானத்தில் நீல வர்ணாம் 
மனசுக்குள் உந்தன் எண்ணம் 
வானம் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் அந்த வர்ணம் 
நான் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் உந்தன் எண்ணம் 
உந்தன் இரன்று கண்களுக்கு 
என் உயிரை இன்றே 
பரிசாக தருகிறேன் 


பெண்களின் மனம்


பெண்களின் மனம் -அவர்களுக்கே 
புரியாத ஒன்று 
பாவம் அதில் எப்படி கிடைக்கும் -ஆண்களுக்கு 
இடம் ஒன்று 
அதனால் அவர்கள் மனம் 
புரிதலே நன்று

கொள்வாயோ..கொல்வாயோ.

எதை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்.. 
என்னிலிருந்து உன்னை தவிர.. 

எதை வேண்டும் என்றாலும் தள்ளி விடு.. 
உன்னிலிருந்து என்னை தவிர... 

அனைத்தும் சொல்லும் அன்னையிடம் கூட 
சொல்ல முடியவில்லை என் வலிகளை.. 

அன்பாய் கேட்கும் நண்பனிடம் கூட 
சொல்ல முடியவில்லை என் வேதனைகளை... 

ஆறுதல் தரும் கவிதைகளில் கூட 
சொல்ல முடியவில்லை.. என் கண்ணீரை... 

புரியாமல் பார்க்கிறாய்.. 
உன்னிடம் கூட சொல்ல முடியவில்ல.. என் காதலை.. 

கடைசியா சொல்லனும்னா.... 

கொள்வதனால்...காதலித்து கொள்... 
கொல்வதனாலும்... காதலித்து கொல்.


பிடிக்காதா ... உனக்கு...........


நான் 

உன்னை விருமபும் போது 

நீ 

என்னை விருமபவில்லை 

இன்று 

நீ என்னை விருமபும் போது 

நான் உன்னை விருமபவில்லை 

என்னோ 

இன்று 

என் இதயம் கல்லாகி போனோதோ...................... suman

இனிமை அவர்கள் சிரிப்புகள்


கறுப்புக் கலர் அவள் உதடுகள் 
தேனில் ஊறிய 
பேரிச்சம் பழங்கள் 
சிவப்புக் கலர் இவள் உதடுகள் 
தேனில் ஊரா 
செர்ரிப் பழங்கள் 
என் விழிகளே உதடுகள் 
இனிமை அவர்கள் சிரிப்புகள்

Thursday 1 September 2011

என் இதயத்தில் இல்லை...♥


உன்னை 
மறக்கும் எண்ணம் 
என் 
இதயத்தில் இல்லை... 
உன்னை 

மறந்தால் 

அது 
என் இதயமே 
இல்லை... 

என்றும் உன் நினைவுடன்..♥


காதல்


எல்லா காதலர்கள்போல் 
நான் பேராசைக்காரன் அல்ல நீ என்றும் என்னுடனிரு என்று நான் கூறமாட்டேன். இன்றுமட்டும் என்னுடனிரு என்றும்நான் கூறும் வார்த்தை இதுவொன்று மட்டும்தான்.

என் தாயானவனே நீ என்ன 
அதிசய பிறவியாடா ?உன்னை 
நேசிக்க ஆரம்பித்து நாட்கள் 
மணித்தியாலங்கள் ஆகி 
மணித்தியாலங்கள் மாதங்களாகி 
மாதங்கள் ஆண்டுகளாகியும் 
உன்னை அருகில் வந்து 
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?

ஏதோ ஒரு மோகம் 
ஏதோ ஒரு தாகம் 
சேர்ந்து இசைக்கும் 
ராகமாய் காதல் பிறக்கும் . 

அங்கே .... 
சோகமே மேகமாய் 
தோன்றி காற்றில் 
கரைந்து கானல் நீராய் 
கண்ணில் வடியும் 
மழை துளியகிறது ....! 

பெண்ணிலா


நிலவை மட்டும் கொண்ட 
பிரபஞ்சம் 
உன் படுக்கையறை !


Thursday 2 June 2011

காதல் சொல்ல...

காதலை சொல்ல
எத்தனையோமுறை நினைத்தும்
இணைந்தே இருக்கவேண்டிய
நம் காதலை, என் இதழ்பிரித்து
எப்படிக் கூறுவேன்? அன்பே!
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று!!

Friday 20 May 2011

காதலியே......

என் கனவினில் வந்தாய்
தூக்கம் தொலைத்தேன்!

என் நினைவினில் வந்தாய்
நிதானம் இழந்தேன்!

எப்போது என் எதிரில் வருவாய்
என எதிர்பாத்திருந்தேன்!

வந்தது உன்னிடமிருந்து
அந்த தொலைபேசி அழைப்பு!

நீதானா என நிதானிப்பதற்குள்
துண்டிக்கப்பட்டது அந்த இணைப்பு!

நீ துண்டித்தது தொலைபேசி இணைப்பை
மட்டும் அல்ல என்னையும்தான்.......!!!

Thursday 28 April 2011

வரமாய் வந்தவள் நீ.....

ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!

பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!

நிழலாய் மட்டுமல்ல நீக்கமற
இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!

அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!

சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!

வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!

காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!

கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...

உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....

நீ எங்கே போனாய்

நீயோ நெடுந்தூரம்
என் நாட்கள் எப்படி ஓடும்

மலராய் இருந்தால் பறித்துவிடுவேன்
நிலவாய் அல்லவா இருக்கிறாய்

தினம் உன் தரிசனம் கண்டு
துயில் கொள்வேன்
இன்று ஏனோ நீ வரவில்லை

மனம் துடிக்கிறது
உறங்க மறுக்கிறது

இன்று ஒரு நாள் மட்டும்
இறந்து போகிறேன்
நாளை வந்து உயிர்த்தெழுப்பு
உன் ஒளிக்கதிர்களால்...

உன் மேல் கொண்ட காதல் தொலையாது

என் உடலோடும் உணர்வான காதலோடும் போராடுகிறேன் போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!

ஏன் பிரிவை கொடுக்கிறாய் தோழி

தோழியே

பிரிவின் வலி அறிந்தவள் நீ

பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்

விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்

விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்

தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்

தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்

என்று மீண்டும் வருவாய் என் வாசல்

தேடி

காத்திருக்கிறேன் உனது வருகைகாக

அல்ல உன் தோள்மீது சாய்ந்து

விசும்பி அழ

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில்
உறக்கம் கலைகிறது -
உயிரைத் தேடித்
பாசம் அலைகிறது!
நெஞ்சம் கொண்டிருக்கும்
நேசத்தின் முன்னே,
கொஞ்சம் பொய்பேசும்
வேஷம் கலைகிறது

தோழியே நீ இன்றி கண்ணீர் விட மனமில்லை

தோழியே நீ இன்றி

கண்ணீர் விட மனமில்லை

துடைக்க நீ இல்லை என்பதால்

உறங்கிவிட மனமில்லை

உயிரே நீ அருகில் இல்லை

உண்ணும் உணவு பிடிக்க வில்லை

உன் உரையாடல் கேட்காமல்

ஒன்றும் செய்ய விருப்பமில்லை

ஒருநொடி கூட உன் நினைவு

அகலாமல்

சிலையாகிறேன் உயிருடன்

வா ரசித்து விட்டு போ

Tuesday 5 April 2011

தேவதையை காதலிக்கிறேன்

என் நண்பன் கேட்டேன்
நீ காதலிக்கிறாயா? என்று
ஆம், என்றேன்
யார் அந்த பெண்? என்றான்.
நான் காதலிப்பது பெண்ணை அல்ல
ஒரு தேவதையை காதலிக்கிறேன்
என்றேன் சிறிது கர்வத்துடன்

காதல் செய்த பாவம்

காதல் செய்த பாவத்துக்கு
நெஞ்சம் வலிக்குது!...
நிம்மதியை தேடித்தேடி
வாழ்க்கை கசக்குது!...

காதல் ஒரு கண்ணாமூச்சி
வாழ்க்கை என்றும் கட்டாப்போச்சி

காதல் நெஞ்சில்
கஷ்டம் வந்தால்
தென்றல் கூட தீயாகும்!..


கல்லறை தாண்டிய காதல்

எண்ணத்தை எடுத்தேன்-என்
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.

காதல் கவிதைகள்..

காதல் கவிதைகள்..

"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!

ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!

பிறப்பு...

என் மரணம் அவள்
மடியில் என்றால்...?
மீண்டும் எனக்கு
ஜனனம் தான்
"தாய் மடியில்!"

தமிழின் சுவை மாறாமல்.....

மாறாத செந்தமிழின்

சொறசுவையினை

சுவை மாறாமல்

உச்சரிக்கும் அவளின் உதடுகள்...

சொர்ப்பனத்தில் சொர்கலோகம்....

நாற்காலியும்

சொர்ப்பனத்தில்

சொர்கலோகம் சென்றதாம்..

உன்னையும்

ஓர்நாள் இடுப்பில்

சுகமாக சுமந்துவிட்டேன் என..

Tuesday 29 March 2011

தொலைகிறேன்.....

உன் ஞாபகங்கள்
என்னைத் தாலாட்ட
உன் அழகோ
என்னை வதைக்க
தேடலில் தொடங்கி
தேடுவதால்
தொலைகிறேன்............!!!

உடையாத கண்ணாடி ..!

இந்த மனிதர்களோடு ...
பேசி
பழகி
மகிழ்ந்து
கோபித்து
உற்சாகப்பட்டு
உதறிவிட்டு
காதலித்து .....
நினைவு தெளிந்த
நாள்தொட்டு
திரும்பி பார்க்கையில் .....
கண்ணாடியே !
உன் மீது
காதல் வருகிறது
நீ மட்டுமே
நன் அழும்போது
எதிரில் நின்று
சிரிக்கவில்லை .......

Saturday 26 March 2011

கடலும் கண்ணீர் வடிக்கின்றதாம்...

கடல் நீரும்

கண்ணீர் ஆனதாம்.....

கடலுக்குள்

அவள் காலடி படாதா என.... 

நிலவோ உன்னை தேடுகிறது

நீ இல்லாத இந்த இரவில் நான் நிலவின் துணை தேடுகிறேன் நிலவோ உன்னை தேடுகிறது! நீ இல்லாத இந்த இரவில் நான் நிலவின் துணை தேடுகிறேன் நிலவோ உன்னை தேடுகிறது..!!!!

சிறுவதில் பூத்த காதல்

சிறுவயதிலேயே
எங்களுக்கு திருமணம்
செய்து வைப்போம்
என்று சொன்ன
எங்கள் பெற்றோர்களால் கூட--இன்று
அவன் வேறோருத்தியை
திருமணம் செய்ய போவதை
தடுக்க முடியவில்லை.....
5 வயதிலேயே
எனக்கு பூத்த காதல்--இன்று
வேரோடு சாய்ந்து விட்டது........ 

காதல் மொழிகள்

உன்னிடம் நான் பேசிய
காதல் மொழிகள் எல்லாம்
உன் காதை தொட்ட
சந்தோசத்தோடு
வெளி வழியில்
உலவி கொண்டு இருக்கின்றன ....

இதை என்றாவது கேட்கும்
வரும் கால காதலர்கள்
புரிந்து கொள்ளட்டும் ...
எப்படி காதலிக்க வேண்டும் என்று .......!!

கண்ணீரும் தித்திக்குதே....


உன்
கன்னத்தில்
வழிந்தோடும்
கண்ணீரும்....
கற்கண்டு போல்
தித்திக்குதே....


Tuesday 22 March 2011

திரும்பி பார்க்காதே...

நந்தவனமே...
நீ நடந்து
போகும்போது என்னை
திரும்பி பார்க்காதே
நான் திசை மாறி
போகிறேன் வழி
தெரியாமல்!


உன் முகத்தை தவிர கவிதை இல்லை ...!

கவிதை
எழுத
காகிதம் எடுத்தேன்
அதில்
உன் முகம்...!
சரி என்று
நீல
வண்ண
வான
காகிதத்தை
எடுத்தேன்
அதிலும்
உன் முகமே...!
தோன்றியது
அப்போது தான்
புரிந்தது
உன் முகத்தை
தவிர
வேறொரு
கவிதை
இவ்வுலகில்
இல்லை
என்று...!


Monday 21 March 2011

வாழ்கை

உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்கையும்
ஒரு புதிர்தான்....


தேன் கேட்கும் மலர்கள்!

தாய் தந்தை தவறவிட்டனரா? இல்லை தவறிவிட்டனரா?

'வாழ்கை வழி காட்டும்' என்று விட்டனரா?
இல்லை 'வழியில் கிட' என்று விட்டனரா?

இன்ப விபத்துக்கள் தயாரித்த
மழலை நோயாளிகளா இவர்கள்?

வாழ்க்கை முடியும் வரை வாழ முடியுமா?
விடை எங்கேயென்று தெரியுமா?

பதினான்கு வயதுக்கு கீழ் பணியிலமர்த்துவது
குற்றம் என்றார்.
அது சரி, பிச்சையெடுப்பது பணி அல்லவே!

சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்!
இவர்கள் அழுதுகொண்டே இருக்கின்றார்களே?

மலர்கள் தேன் கேட்டால் கொடுத்து விடுங்கள்
பாவம்! மலர்கள் சிரிக்கட்டும்.

கொடுமையில் கொடுமை, இளமையில் வறுமை
ஆனால், இவர்களுக்கோ இப்போதே வறுமை!


Saturday 19 March 2011

பிரமனிடம் ஒரு வரம்


உன்னில் நான் இல்லை
உன் கண்ணிலும் காதல் இல்லை
மண்ணில் நான் இருந்து என்ன பயன்
உனக்கு பிடித்தவனோடு
உனக்கு பிடித்த குழந்தையாக
உன் மடியில் தவழும்
வரங்கள் கேட்பேன்
...........

என் தேகத்தில்...........

என் தேகத்தில் உள்ள காலங்கள் எல்லாம் உன்னைத்தான் உச்சரிக்கும்
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr

Friday 18 March 2011

அன்பு..............

உன்னால் முடியாது.........

எட்டாத துரத்தில் பிரிவு வேண்டும்

அழகான  ஒரு சூரியன் 
எனை பார்த்து சிரித்தது 
சிரிப்பின் சிதறலில்  அகிலத்தை விநாடி கணக்கில் கண்டேன் 
உனக்காக நானும் 
எனக்காக நீயும் 
வாழ்த்தால் போதும் என்றது மனது 
வன்முறை வன்முறை நடக்கட்டும் 
சில நொடியில் முடியட்டும் 
பிரிவு மட்டும் எட்டாத துரத்தில் இருக்கட்டும் 

Monday 14 March 2011

என் காதல் பூக்கள்...

                                         

காலையில் தோன்றி...
இரவில் மறையும் சூரியனைப்போல...
இரவில் தோன்றி....
விடியலில் மறையும் கனவினைப்போல தான்!
என் காதலும்.....

என் காதல் பூக்கள்...
கல்லறை பூக்கள் ஆனாலும்!
என் காதல் மட்டும்...
உயிர்த்திருக்கும்....


காதல் தோல்வி ஆனாதால் .................

பார்க்கும் போதெல்லாம்
கை குலுக்கி கொண்டோம் நாம்
நண்பர்களாக இருந்த போது

பார்க்கும் போதெல்லாம்
கட்டி பிடித்து கொண்டோம்
நாம் காதலர்கள் ஆனா போது

இப்போது பார்க்கும் பொழுதெல்லாம்
விலகி செல்கிறோம்
நம் காதல் தோல்வியானதால்...............

என் வாழ்வோடு பயணிக்கும் அவள் நினைவு

தென்றல் காற்றோடு
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....

சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....


உன் வருகை வேண்டி!

ஒரு அழகான காலை பொழுதில்

உன் வருகைக்காக காத்திருப்பேன்

நினைவில் சுகம், கனவில் கற்பனை!

பித்தனின் மனசுகம் - என் இருக்கையில்

பக்கம் வருவாயா! முத்தம் இடுவாயா!!

என்னவளே

என்னவளே

நீ திட்டும் போது

ரசிக்க தெரிந்த எனக்கு

நீ மௌனமாக இருக்கும் போது

என்னால் ரசிக்க முடியவில்லையே

ஏனெனில் .....

அந்த மௌனம் மரணத்தை விட

கொடுமையானது...


உண்மையான காதல் ....

மறப்பதும்
முடியாமல்
இறப்பதும்
மட்டுமே
காதல் இல்லை ......
மறக்காமல்
இருப்பதும்
இறக்கும் வரை
நினைப்பதும் ....
இறந்த பின்பு
நிலைப்பதுமே
உண்மையான காதல் ...... சுமன் 


முத்தமிடுவதை தவிர............

மார்கழி மாத

குளிருக்கு

இதமானது என்றால்

நீ என்னை

கட்டி அணைத்து

முத்தமிடுவதை தவிர

வேறென்ன இருக்கமுடியும்...

மெழுகு வர்த்தி