Friday 16 December 2011
கொள்வாயோ..கொல்வாயோ.
எதை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்..
என்னிலிருந்து உன்னை தவிர..
எதை வேண்டும் என்றாலும் தள்ளி விடு..
உன்னிலிருந்து என்னை தவிர...
அனைத்தும் சொல்லும் அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை என் வலிகளை..
அன்பாய் கேட்கும் நண்பனிடம் கூட
சொல்ல முடியவில்லை என் வேதனைகளை...
ஆறுதல் தரும் கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை.. என் கண்ணீரை...
புரியாமல் பார்க்கிறாய்..
உன்னிடம் கூட சொல்ல முடியவில்ல.. என் காதலை..
கடைசியா சொல்லனும்னா....
கொள்வதனால்...காதலித்து கொள்...
கொல்வதனாலும்... காதலித்து கொல்.
Subscribe to:
Posts (Atom)