Pages

Monday 16 January 2012

தெரியாது இதுதான் அன்பு என்று


தெரியாது இதுதான் அன்பு என்று 
கண் கலங்கி நிற்கும் போது 
கை கொடுத்த நட்பை - நான் 

நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை.......... 
துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது 
தட்டி கொடுத்த உறவுகளை - நான் 

நட்பென்று நினைத்ததும் இல்லை..... 
நடந்து செல்லும் பாதை எங்கிலும் 
நிழல் போல அருகில் நடந்து வந்து 

புன்னகைத்த உள்ளதை - நான் 
நட்பென்று உணரவில்லை ........ 
தெரியாது இதுதான் அன்பு என்று 
உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன் 

உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல 
உயிரோட்டமான நட்பும்தான் என்று .........

{கவிஞன் சுமன் }

No comments:

Post a Comment