Pages

Sunday 13 March 2011

பித்தனாய் அலைகின்றேன்......

நீ உன் மன நிலத்தில்
என்னை தான் வித்தாக
புதைத்து வைத்து இருந்தாய் என
கனவு கண்டு இருந்தேன்.

நீ
என்னை பார்க்கும் போதெலாம்
லட்சம் பனிக்கட்டி படுகையில்
படுத்து புரள்வதாய் கனவு கண்டேன்

உன் அடிமனதில்
ஆழ ஊன்றிய அசுர அன்பை
வெளிகாட்டது நடப்பது ஏன்?
உன் பார்வையின் கட்டு அவிழ்ந்து
பார்க்காது போன்னமையால்
பித்தனாய் அலைந்து நிற்கின்றேன்

எத்தனையோ அசுர சொற்களின் பொருள்கண்டு
புதைந்து இருந்த பொக்ஹிசம் கண்டு
பூரித்த எனக்கு
உன் அன்பு சுரங்கத்தில் பிறக்கும்
உள்ளத்து தேனை எடுக்க முடிய வில்லை ஏன்?
நான் பித்தனாய் அலைகின்றேன்....................?


No comments:

Post a Comment