Pages

Wednesday 9 March 2011

என் தேவதை

தூக்கம் வராத இரவுகளில்
தேவதையை நினைத்து கொள்வேன் ...
வெண் பஞ்சு உடையணிந்து ,
குழந்தை போல் சிரித்து
கூட்டம் கூட்டமாய் ஒடியாடி,
கிரீடக்கள் மின்ன
விரல் இடுக்கில் பட்டாம்பூச்சிகள்
படபடக்க ..
பறக்க விடுவாளா ? என மனம்
பதை பதைக்க
சிறகு விரித்து அவளே பறந்தாள் ....

அவள் நறுமணம் எங்கும் பரவ
நானும் நித்திரை கொள்வேன் என்னை மறந்து..

பாவம் தேவதை ...

அவள் தூங்கி
நான் பார்த்ததேயில்லை ..
அவளுக்கு
தூக்கம் வராத இரவுகளில் ??

கனவுகளுடன் சுமன்

No comments:

Post a Comment