அன்பாய் என்னை அணைத்து
அருகில் இருத்தி நெற்றியில்
நீ இட்ட ஒற்றை முத்தத்தில்
நான் உணர்ந்தேன் என்மீது
நீ கொண்ட அன்பின் ஆழத்தை
மட்டுமல்ல ....
இதுவரையும் உனக்கும்
எனக்குமான பிரிவையும்
அதனால் நம் மனசு இருந்து
தவித்த தவிப்பின் வலியையும்..
உன் ஒற்றை முத்தம் சொன்னது
இனியும் உன்னை பிரியமாட்டேன்
என்று ..........
முத்தத்தின் பின்பு உந்தன்
அரவணைப்பின் வருடல் ....
எந்தன் நகங்கள் உன்னை
கீற எந்தன் உதடுகள் பேச
மொழி இன்றி போனதுபோல்
"ம்ம்ம் "என்று அனுங்கியது
உந்தன் செல்லம் கொஞ்சலுக்கு
பதில் அழிப்பதாய்.......
உந்தன் அணைப்பிலே கழிந்தது
இனிமையான இராப்பொழுது ...
விடிந்ததை உணர்ந்தவளாய்
எழுந்து அசதியாய் தூங்கும்
உந்தன் தலைமுடியை
வருடியவளாய் உன்
நெற்றிப்பொட்டில் ஒரு
முத்தமிட்டேன் ......
படுக்கையை விட்டு எழுந்து
வெளியே வந்தபின் தான்
உணர்ந்தேன் ...எல்லாமே
கனவு என்பதை நிஜத்தில்
எப்போதும் நீ தொலைதூரம் தான்
கனவிலும் நினைவிலும் மட்டும்
எப்போதும் நான் உந்தன் அரவணைப்பில்....
அருகில் இருத்தி நெற்றியில்
நீ இட்ட ஒற்றை முத்தத்தில்
நான் உணர்ந்தேன் என்மீது
நீ கொண்ட அன்பின் ஆழத்தை
மட்டுமல்ல ....
இதுவரையும் உனக்கும்
எனக்குமான பிரிவையும்
அதனால் நம் மனசு இருந்து
தவித்த தவிப்பின் வலியையும்..
உன் ஒற்றை முத்தம் சொன்னது
இனியும் உன்னை பிரியமாட்டேன்
என்று ..........
முத்தத்தின் பின்பு உந்தன்
அரவணைப்பின் வருடல் ....
எந்தன் நகங்கள் உன்னை
கீற எந்தன் உதடுகள் பேச
மொழி இன்றி போனதுபோல்
"ம்ம்ம் "என்று அனுங்கியது
உந்தன் செல்லம் கொஞ்சலுக்கு
பதில் அழிப்பதாய்.......
உந்தன் அணைப்பிலே கழிந்தது
இனிமையான இராப்பொழுது ...
விடிந்ததை உணர்ந்தவளாய்
எழுந்து அசதியாய் தூங்கும்
உந்தன் தலைமுடியை
வருடியவளாய் உன்
நெற்றிப்பொட்டில் ஒரு
முத்தமிட்டேன் ......
படுக்கையை விட்டு எழுந்து
வெளியே வந்தபின் தான்
உணர்ந்தேன் ...எல்லாமே
கனவு என்பதை நிஜத்தில்
எப்போதும் நீ தொலைதூரம் தான்
கனவிலும் நினைவிலும் மட்டும்
எப்போதும் நான் உந்தன் அரவணைப்பில்....
No comments:
Post a Comment