Pages

Wednesday 9 March 2011

என் தாகம்

அழகின் ஆலயம் நீ
அதில்
சேவகம் செய்யும் வாய்ப்பை
தருவாயா...!

அன்பின் மழை நீ
அதில்
முழுக்க நனையும் வாய்ப்பை
தருவாயா...!

அறிவின் சிகரம் நீ
அதில்
ஏறமுடியவில்லையென்றாலும்
அதை தொடும் வாய்ப்பையாவது
தருவாயா...!

வாழ்வின் வெளிச்சம் நீ
அதில்
நான் தெரியாவிட்டாலும்
உன் நிழலில் நிற்கும்
வாய்ப்பையாவது
தருவாயா...!

தேன் குணம் மாறாத
உன் இளமை
அதை
சுவைக்க முடியாவிட்டாலும்
ஒரு சொட்டு தந்து
என் தாகத்தை தீர்ப்பாயா.....!நீ..!

No comments:

Post a Comment