நீயோ நெடுந்தூரம்
என் நாட்கள் எப்படி ஓடும்
மலராய் இருந்தால் பறித்துவிடுவேன்
நிலவாய் அல்லவா இருக்கிறாய்
தினம் உன் தரிசனம் கண்டு
துயில் கொள்வேன்
இன்று ஏனோ நீ வரவில்லை
மனம் துடிக்கிறது
உறங்க மறுக்கிறது
இன்று ஒரு நாள் மட்டும்
இறந்து போகிறேன்
நாளை வந்து உயிர்த்தெழுப்பு
உன் ஒளிக்கதிர்களால்...
No comments:
Post a Comment