Pages

Tuesday 5 April 2011

கல்லறை தாண்டிய காதல்

எண்ணத்தை எடுத்தேன்-என்
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.

No comments:

Post a Comment